என்று பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கூறினார்.
“தற்போது நடு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது.அன்று 7 முதல் 8 சதவீதமாகக் காணப்பட்ட பொருளாதார வளர்ச்சி வேகம் இன்று 1 முதல் 2 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளது.இந்த நிலைமையிலிருந்து நாட்டை விடுவிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் கடுமையாக முயற்சித்து வருகிறார்.இன்று அரச சேவையில் இணையும் இளைஞர்களாகிய நீங்கள், இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு எடுக்கப்படும் முயற்சிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கி அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்” என்று பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் திரு. ஜனக பண்டார தென்னகோன் அவர்கள் இலங்கை திட்டமிடல் சேவைக்கு புதிதாக ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட 75 உத்தியோகத்தர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போது குறிப்பிட்டார்.
2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற திட்டமிடல் சேவைக்கான திறந்த போட்டிப் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்ற 75 பேருக்கு இவ்வாறு நியமனம் வழங்கப்பட்டதுடன் அவர்களுக்கு 6 மாதங்கள் பயிற்சியளிக்கப்பட்டது.இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவகத்தினால் இந்தப் பயிற்சி நிகழ்ச்சி நடாத்தப்பட்டதுடன் இந்தப் பயிற்சி ஊடாக அவர்களுக்கு கோட்பாட்டு மற்றும் நடைமுறை அறிவை வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமைச்சர், “மத்திய அரசு திட்டமிடுகின்ற மற்றும் நடைமுறைப்படுத்துகின்ற அனைத்து அபிவிருத்திச் செயற்திட்டங்களையும் கிராமிய மட்டத்தில் எடுத்துச் செல்லும் பொறுப்பு உங்களிடம் ப்படைக்கப்படுகின்றது.இச்செயற்பாடுகளின் போது மிகவும் வெளிப்படைத் தன்மையுடன், மோசடிகளின்றி கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.இலங்கையில் எந்த இடத்திற்கு உங்களுக்கு நியமனம் வழங்கப்பட்டாலும், அந்த இடத்தில் உங்கள் கடமைகளை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.இந்த நாட்டை தொடர்ந்தும் ஏழ்மையில் வாடும் ஒரு நாடாக வைத்திருக்கு எமது அரசால் முடியாது. நாட்டு மக்கள் ஒரு புதிய தலைவரை நியமித்ததன் மூலம் இந்த அபிவிருத்தி முன்னெடுப்பையே எதிர்பார்த்தனர்.இதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.அதன் போது தீர்மானங்களை எடுக்கப் பயப்பட வேண்டாம்.நீங்கள் எடுக்கும் மக்களுக்குச் சார்பான ஒவ்வொரு தீர்மானத்தின் போதும் உங்களைப் பாதுகாக்க நாங்கள் இருக்கிறோம்” என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் எஸ். ஹெட்டிஆரச்சி, இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர் பி.கே.எஸ். ரவீந்திர ஆகியோர் உள்ளிட்ட உள்ளிட்ட அமைச்சின் உத்தியோகத்தர்கள் பலர் பங்கேற்றனர்.