அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு உரித்துடையதாக காணப்பட்ட இலவச புகையிரத ஆணைச்சீட்டு வசதியைப் பெற்றுக்கொள்கையில் இதுவரை காலம் நடைமுறையிலிருந்த கிராம உத்தியோகத்தர் சான்றிதழ் முறை மற்றும் பிரதேச செயலாளரின் அங்கீகாரம் இரத்துச் செய்து கணனிமயப்படுத்தப்பட்ட முறையில் அவ் வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்கு தற்சமயம் வசதி வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. ஓய்வூதியத் திணைக்களம் மற்றும் புகையிரத திணைக்களத்துடன் இணைந்து இச்சேவையை வழங்கவுள்ளது. இச்சேவை பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன், போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன போன்றோரின் தலைமையின் கீழ் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இடம்பெற்றது. குறித்த ஓய்வூதியகாரர்களின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை புகையிரத நிலையத்துக்கு வழங்குவதன் மூலம் இருக்கைகளை ஒதுக்கிக் கொள்வதற்கான வாய்ப்பு இதன் பிறகு நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.